பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தோட்டக்கலை துறை அதிகாரி தேர்வு ரத்து
தோட்டக்கலை துறை அதிகாரி உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த எழுத்துத் தேர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.