பிக்பாஸ் கவின் தாயாருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கவின் தாயார் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் சீட்டு கம்பெனி நடத்தி வந்ததாக தெரிகிறது. அந்த சீட்டு கம்பெனியில் அவர்கள் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த சில வருடங்களாக நடைபெற்று இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது

இந்த தீர்ப்பில் கவின் தாயார் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கவினுக்கு இன்னும் தெரியாது என்பதும், தெரிந்தால் அவர் உடனே வெளியே வந்துவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply