பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அங்கீகாரம்: ஜனனி வேண்டுகோள்

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய எய்ட்ஸ் செயல்பாட்டு திட்ட அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜனனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘இந்தியாவில் 10 லட்சம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும், வீட்டு வேலை, கட்டட வேலை, கூலி வேலைகளில் ஏற்பட்ட துன்புறுத்தல், சுரண்டல் மற்றும் வன்முறை காரணமாகவே நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாலியல் தொழிலாளர் மீதான வன்முறை, பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும் என்றும், திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை போல, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் ஜனனி தெரிவித்தார்.

Leave a Reply