shadow

பாலியல் குற்றச்சாட்டை பொய்யாக்க ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட சாமியார்: பெரும் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சாமியார் மீது அவரது உறவுப்பெண்ணே பாலியல் புகார் கூறியதால் மனவேதனை அடைந்த சாமியார் திடீரென தனது ஆணுறுப்பை அறுத்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உபி மாநிலத்தில் உள்ள காம்ஸின் என்ற கிராமத்தில் மாதானி பாபா என்ற சாமியார் உள்ளார். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இவரிடம் அடிக்கடி வந்து ஆசி பெறுவது உண்டு

இந்த நிலையில் இந்த சாமியாரின் உறவுக்கார பெண் ஒருவர் சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமியார் தன்மீது எந்த குற்றமும் இல்லை என்று சொல்லி பார்த்தும் அந்த பகுதியில் உள்ளவர்கள் நம்பவில்லை. இதனால் தான் குற்றமற்றவர் என்பதைஉ நிரூபிக்க திடீரென தனது ஆணுறுப்பை அறுத்து கொண்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர்ம் மாதானி, தான் ஆசிரம் ஒன்றை கட்டி வருவதாகவும், இதனை பிடிக்காத சிலர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

 

Leave a Reply