பாரீஸ் நகர ஈபிள் டவர் விளக்குகள் அணைப்பு! ஏன் தெரியுமா?

இலங்கையில் நேற்று நிகழ்ந்து தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில் இன்னும் அந்நாட்டில் பதட்டம் நீடித்டு வருகிறது.

இந்த நிலையில் இலங்கையில் உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றான ஈபில் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விளக்குகள் அணைக்கப்பட்ட ஈபிள் டவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

 

Leave a Reply