shadow

பாஜக தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: எஸ்.வி.சேகர்

பாஜக தமிழக தலைமை பதவியை ஏற்க தயார் என சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தற்போது தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக வரும் தேர்தலில் பத்து சதவிகிதம் வாக்குகளை பெறும் என்றும், எந்த கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றாலும் பாஜக தயவு இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்

பாஜகவை விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு தேர்தலில் அதிக வாக்குகளை பாஜக பெறும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply