பாஜகவுக்கு மருமகன் மூலம் தூது! அமைச்சர் ஜெயகுமார்
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி ஏற்பட்டால் அதற்கு ஆதரவு கொடுக்க திமுக ரகசிய தூது அனுப்பியுள்ளதாகவும், இதற்காகத்தான் ஸ்டாலின் மருமகன் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக தூதுவிடுவதாகக் குறிப்பிட்ட ஜெயக்குமார், மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலம் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஆட்சி அமைக்க தேவைப்பட்டால் பாஜகவும், திமுகவின் ஆதரவை பெற்றுக்கொள்ள தயங்காது என்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர். எனவே தேர்தலுக்கு பின் கூட்டணி உடையும் ஆபத்தும் உள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.