பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட தமிழிசை மகன்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனின் மகன் பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செயதியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது, அவரது மகன் சுகநாதன் பாஜகவுக்கு எதிராக திடீரென கோஷங்களை எழுப்பினார். இதை கண்டு அங்கு விரைந்த தமிழிசையின் பாதுகாவலர்கள் சுகந்தனை தடுத்து அங்கிருந்து அவரை விமான நிலையத்திற்கு வெளியே அழைத்து சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த தமிழிசை செளந்திரராஜன் குடும்ப பிரச்சனை காரணமாக தனது மகன் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டதாக விளக்கமளித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.