shadow

பாகிஸ்தான்: பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை கல்லால் அடித்து கொல்ல உத்தரவிட்ட பஞ்சாயத்து

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் போன்ற ஒருசில நாடுகளில் மட்டுமே பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு தண்டனை கொடுப்பார்கள்.

அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த ராஜன்பூர் என்ற பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவரே பலாத்காரம் செய்தார். இதுகுறித்து உள்ளூர் பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டபோது பஞ்சாயத்தார் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை கல்லால் அடித்து கொல்ல உத்தரவிட்டன.

இந்த பஞ்சாயத்து தலைவர்களில் பலாத்காரம் செய்த குற்றவாளியின் தந்தையும் நீதிபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply