பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்றார் இம்ரான்கான்
பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இன்று பதவியேற்றார். அவருக்கு உஅல்க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இம்ரான்கானுக்கு அந்நாட்டு அதிபர் மாம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இம்ரான்கானை தொடர்ந்து அவரது அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து உள்பட பலர் பங்கேற்றனர். இந்தியா உள்பட அனைத்து நாடுகளுடனும் நட்புணர்வோடு பாகிஸ்தான் நடந்து கொள்ளும் என்று பிரதமர் பதவியேற்ற பின்னர் இம்ரான்கான் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.