shadow

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்தியா அதிரடி தாக்குதல்: எல்லையில் பரபரப்பு

பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதால் இருநாட்டு எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது.

சற்றுமுன்னர் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் நிர்வாக அலுவலகம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அரசு தரப்பிலிருந்து இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் அதிபராக இம்ரான்கான் பதவியேற்றதும் இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply