பள்ளி டிசியில் ஜாதி குறிப்பிட தேவையில்லை: பள்ளிக்கல்வித் துறை

வருவாய்த்துறை வழங்கிய சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது

மாணவர்களின் டிசி என்று கூறப்படும் மாற்றுச் சான்றிதழில் ஜாதியை குறிப்பிடும் வழக்கம் இருந்து வரும் நிலையில் தற்போது அம்முறை மாற்றப்பட்டு இனிமேல் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

Leave a Reply