shadow

பல பெண்களுடன் முறையற்ற உறவு: கணவரின் ஆணுறுப்பை வெட்டியெறிந்த மனைவி

சீனாவில் பல பெண்களுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்ததாக கணவர் மீது சந்தேகம் அடைந்த பெண் ஒருவர் தனது கணவனின் ஆணுறுப்பை கத்தரிகோலால் வெட்டியெறிந்த திடுக்கிடும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுல்ளது.

ஜியாங்கிசி மாகாணத்தை சேர்ந்த லீ என்பவருக்கு சமீபத்தில் புதிய வேலை கிடைத்துள்ளது. அதனால் கட்டிய மனைவியை அவர் பல நாட்கள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதனால் கவலை அடைந்த அவரது மனைவி, கணவன் மற்ற பெண்களுடன் தாகத உறவில் இருந்து வருவதாக சந்தேகமடைந்தார். எனவே மற்ற பெண்களுடன் பேச, சிரிக்க, தொலைபேசியில் உரையாட கணவர் லீ-க்கு தடை விதித்தார்.

எனினும் மனைவிக்கு அவர் மீது சந்தேகம் குறையவில்லை. இந்நிலையில் நிர்வாண நிலையில் லீ குளித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு தெரியாமல் சென்று அவரது அணுறுப்பை கத்திரிக்கோலால் துண்டித்துவிட்டார். வலியால் துடித்த லீ-யை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. லீ தற்போது தேறிய நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை, லீ-யின் மனைவியை கைது செய்துள்ளது. சந்தேக புத்தியால் கணவனின் ஆணுறுப்பை மனைவி அறுத்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply