பணம் வாங்காமல் புத்தகம் தரும் ஸ்டால்: சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அதிசயம்

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில், வாங்கும் புத்தகத்திற்கு பணம் வாங்காமல் பணத்திற்கு பதிலாக வேறு புத்தகத்தை வாங்கும் புத்தக அரங்கு ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் 43வது புத்தக கண்காட்சியில் 160 ஆம் எண்ணில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நாவல், வரலாறு, ஆன்மீகம், விவசாயம் போன்ற பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன

இந்த அரங்கில், படித்து முடித்த பழைய புத்தகங்களைக் கொடுததுவிட்டு, அதற்கு பதிலாக நமக்கு பிடித்த வேறு ஒரு புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம். இதற்காக பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்பதால் இந்த அரங்கில், வாசகர்கள் பலர் ஆர்வமுடன் புத்தககங்களை வாங்கிச் செல்கின்றனர்.

Leave a Reply