படிக்கட்டில் உட்கார்ந்து பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் இருந்து கள்ளகுறிச்சி சென்ற அரசு பேருந்தில் சென்னை எருக்கஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் பயணம் செய்தார். உட்காருவதற்கு சீட்டு இல்லாததால் அவர் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது

இந்த நிலையில் திடீரென படிக்கட்டில் உட்கார்ந்து இருந்த ஏழுமலை தவறி கீழே விழுந்தார் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply