நெல் ஜெயராமனின் நெல்லை போல சிந்தனையையும் காத்திட வேண்டும்: கமல்ஹாசன்
இன்று அதிகாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார் என்ற செய்தி அனைத்து விவசாயிகளுக்கும் பேரதிர்ச்சியை அளித்தது.
இந்த நிலையில் அவருடைய இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரில் நாளை நடைபெறவுள்ளது. இறுதிச்சடங்கிற்கான அனைத்து செலவுகளையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார்
இந்த நிலையில் நெல் ஜெயராமனின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.