நீதி நியாயம் வென்றிருக்கிறது: தீர்ப்பு குறித்து கனிமொழி
திமுகவின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பு என்று கருதப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ள நிலையில் இந்த தீர்ப்பில் கனிமொழி, ஆ.ராசா உள்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து கூறி வரும் நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ராஜ்யசபா எம்பியும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி கூறியதாவது: 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நீதி நியாயம் வென்றிருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வழக்கை பொய் வழக்கு என திமுக கூறி வந்ததற்கு தீர்வு கிடைத்துள்ளது. எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
கனிமொழி இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்த திமுகவை சேர்ந்த பெண் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.