நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..
ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டம் குறித்த வழக்கு நேற்று நீதிமன்றத்துக்கு வந்தபோது, வரும் 25ஆம் தேதிக்குள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இன்று மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒருசில இடங்களில் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு நீதிமன்றத்தின் ரியாக்சன் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.