நீட் தேர்வை எளிதாக எழுத அமைச்சர் கூறிய அசத்தல் ஐடியா
நீட் தேர்வு எழுதுவது என்பது மிகப்பெரிய கஷ்டமான வேலை என மாணவர்கள் மத்தியில் ஒரு அச்சம் பரவியிருப்பதால் லட்சக்கணக்கில் செலவு செய்து கோச்சிங் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் 12ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். புதிய பாடத்திட்டத்தில் நீட் தேர்வுக்கு எளிதாக தயாராகும் வகையில் பாடங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.