shadow

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவாரம் கூடுதல் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், ஒரு வாரம் அவகாசம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

முன்னதாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கோரியிருந்தனர். இதுகுறித்த மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

இந்த நிலையில் இந்த மனுவை சற்றுமுன் விசாரணை செய்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி அதாவது டிசம்பர் 7ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Leave a Reply