நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி: தேனி மருத்துவக் கல்லூரியில் சர்ச்சை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சர்ச்சை எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மாணவர் மீதான புகாரை தொடர்ந்து ஆவணங்களை சுகாதாரத்துறை இயக்குநரின் ஆய்வுக்கு மருத்துவக் கல்லூரி அனுப்பியது. இந்த ஆய்வுக்கு பின் அந்த குறிப்பிட்ட மாணவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது

நீட் தேர்வு நடத்துபவர்கள் பெரிய அளவில் கெடுபிடி காட்டியிருந்தும் ஆள்மாறாட்டம் செய்தது எப்படி? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது

Leave a Reply