தமிழகத்தை நோக்கி மிக வேகமாக நெருங்கி கொண்டிருக்கும் நிவர் புயல் காரணமாக தமிழக புதுச்சேரி எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது

மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து இன்று மாலை அல்லது இரவு நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல பகுதிகள் நிவர் புயலால் பாதிப்படையும் என்பதால் தமிழக புதுச்சேரி கலை சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply