நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தேதி அறிவிப்பு. பரபரப்பு தகவல்
தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர் 
இவர்களில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சிறார் சிறையில் மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டு விடுதலையாகி விட்டார் 
இதனை அடுத்து மீதமுள்ள முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மேல்முறையீட்டிலும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது இருப்பினும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்ந்த நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை கொலை செய்தவர்களை என்கவுண்டர் செய்த பின்னர் நிர்பயா குற்றவாளிகளையும் விரைவில் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது
இந்த நிலையில் சற்றுமுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் 15 நாட்களில் நால்வரின் தூக்கு உறுதி என்பது தெரியவருகிறது

Leave a Reply