நீட்டிப்பா? தளர்வா?

தமிழகத்தில் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் 7ஆம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகள் அறிவிப்பதா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்

இந்த ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது ஊரடங்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருமா என்பது குறித்த தகவல் வெளிவரும்

மேலும் இபாஸ் நடைமுறை குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்வார் என்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவை தொடங்குதல் குறித்து அவர் ஒரு முடிவை எடுப்பார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் உடன் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் முதலமைச்சர் அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply