நான் சொன்னதால்தான் தமிழத்திற்கு தண்ணீர் கிடைத்தது: நடிகை சுமலதா

தான் சொன்னதால்தான் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாக முன்னாள் நடிகையும், எம்.பி.யுமான சுமலதா தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த 19-ம் தேதி முதல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து கர்நாடகா நீர் திறந்து வருகிறது. இந்நிலையில், மாண்டியா தொகுதி எம்பியும், முன்னாள் நடிகையுமான சுமலதா, தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நான் தான் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க பரிந்துரை செய்ததாகவும், இதனையடுத்தே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply