நாடு திரும்பிய முதல்வருடன் துணை முதல்வர் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

லண்டன், அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அரசுமுறை சுற்றுலா சென்று பல தொழிலதிபர்களை கவர்ந்து முதலீட்டை அள்ளி வந்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இன்று காலை தமிழக முதல்வர் பழனிச்சாமி சென்னை திரும்பிய நிலையில் அவரை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்

அரசுமுறை வெளிநாட்டு பயணம் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதற்கு, முதலமைச்சர் பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்

மேலும் முதல்வர் வெளிநாடு சென்றபின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் துணை முதல்வர் ஆலோசனை செய்ததாக தெரிகிறது

Leave a Reply