shadow

நாடாளுமன்றத்தில் தனித்து போட்டி, இடைத்தேர்தலுக்கு பேச்சுவார்த்தை: சரத்குமார்

நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தனித்து போட்டியிடலாமா என நினைப்பதாக  மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் விரைவில் வரவிருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்து கட்சியினர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஏற்கனவே விஜயகாந்த் தனது தேமுதிக கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என தெரிவித்திருக்கும் நிலையில் அதே முடிவை சரத்குமாரும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply