நயன்தாரா சர்ச்சை குறித்து மீண்டும் பேசிய ராதாரவி
நேற்று நடிகர் ராதாரவி, அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன் இணைந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது நயன்தாரா சர்ச்சை குறித்து தான் பேசியதற்கு விளக்கம் அளித்தார்.
‘கொலையுதிர் காலம்’ படவிழாவில் நயன்தாரா குறித்து தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும், ஆனால் இந்த சம்பவத்தில் இருந்து தான் ஒரு பாடம் கற்று கொண்டதாகவும், அந்த பாடம் என்னவெனில், ‘யார் யாருக்கு என்னென்ன உறவுன்னு தெரியாம பேசக்கூடாது’ என்பதுதான் என்றும் கூறினார். மேலும் நான் பேசியது தவறு என்றால் அதற்காக வருத்தம் தெரிக்கவும் தயார் என்றும் நான் கூறியிருந்தேன். ஆனாலும் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.