நம்பியவர்களை ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு
இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிச்சாமி மீது நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதனையடுத்து கைதான அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியை பிப்ரவரி 7 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி சமூக வலைத்தளத்தில் தான் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டதாகவும் உள்பட சில சர்ச்சைக்குரிய தகவல்களை பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.