நடிகை சமந்தா குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் மர்ம பிணம்: அதிர்ச்சி தகவல்
நடிகை சமந்தா குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்றில் மர்ம பிணம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரபல தெலுங்கு நடிகரும் சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜுனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிதிலமடைந்த பிணம் ஒன்றை போலீசார் நேற்று கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த அதிர்ச்சி தகவலால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கரெட்டி மாவட்டத்தில் நாகார்ஜூனாவுக்கு சொந்தமான ஒரு பண்ணை வீடு உள்ளது இந்த பண்ணை வீட்டில் துர்நாற்றம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி போலீசார் சோதனை செய்து பார்த்தபோது கடந்த 6 மாதத்திற்கு முன் மரணம் அடைந்த ஒருவரின் பிணத்தை கைப்பற்றியுள்ளனர். இந்தப் பிணம் யாருடையது? தற்கொலையா? கொலையா? என்பது பற்றி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.