shadow

நக்கீரன் ஆசிரியர் கோபால் திடீர் கைது

நக்கீரன் ஆசிரியர் கோபால் சற்றுமுன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலை போலீசார் கைது செய்ததாக முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. நக்கீரன் ஆசிரியரை கைது செய்யப்பட்டது குறித்து தற்போது வரை எந்த ஒரு விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் குறித்து தவறாக செய்தி வெளியிட்டதாக ஆளுனர் மாளிகையின் புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நக்கீரன், கைது, கோபால், ஆளுனர், புகார்

Leave a Reply