நகைக்கடை கொள்ளையனிடம் சிக்கியது இந்த சீனியர் நடிகையுமா? அதிர்ச்சி தகவல்

தனியார் நகை கடை கொள்ளையன் முருகனிடம் ஒரு சில துணை நடிகைகளும், ஒரு இளம் தமிழ் நடிகையும் தொடர்பில் இருந்தனர் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த செய்திகள் எந்த அளவிற்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியவரும்

இந்த நிலையில் தற்போது துணை நடிகைகள், இளம் நடிகை மட்டுமின்றி ஒரு சீனியர் நடிகையும் கொள்ளையன் முருகனிடம் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுவதால் அந்த சீனியர் நடிகை கலக்கத்தில் இருப்பதாக அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சீனியர் நடிகை பல முன்னணி தமிழ் நடிகர்களுக்கு அக்காவாக நடித்து இருந்ததாகவும் தெரிகிறது. இந்த தகவலால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply