சிஎஸ்கே அணியை சிறப்பிக்கும் தோனியின் ரசிகரான கடலூர் மாவட்டம் அரங்கூரில் வசிக்கும் கோபி கிருஷ்ணன் என்பவர் தனது வீட்டின் சுவர்களுக்கு மஞ்சள் வர்ணம் தீட்டி தோனியின் புகைப்படங்களையும் சுவர்களில் வரைந்திருந்தார்.
தனது வீட்டையே மஞ்சள் நிறமாக மாற்றிய அந்த ரசிகருக்கு தோனி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒரு வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றுவது என்பது சாதாரணமான காரியமல்ல. அதுமட்டுமின்றி அந்த வீட்டின் முன் நின்று அவர் குடும்பத்தினரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.
தோனியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.