தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், சில வாரங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு திடீரென நேற்றிரவு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். விஜய்காந்த் உடல்நலம் சீராக இருப்பதாகவும், வழக்கமான டயாலிசிஸ் சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதை அடுத்து தேமுதிக தலைமை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்’.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.