shadow

தெலுங்கானா பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்: முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி உத்தரவு

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கண்டிப்பாக தெலுங்கு படிக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதன்படி தெலுங்கானா மாநிலத்தில் இனிமேல் வேற்று தாய்மொழியை கொண்டவர்களும் கண்டிப்பாக 12ஆம் வகுப்பு வரை தெலுங்கு படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply