தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த தம்பதி மர்ம மரணம்
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த தம்பதி மர்ம மரணம் அடைந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சோலைராஜ் மற்றும் ஜோதி. இவர்கள் இருவரும் மர்ம நபர்களால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இருவேறு சமூகத்தை சேர்ந்த 24வயது சோலைராஜ் மற்றும் 21 வயது, ஜோதி ஆகியோர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதால் இவர்களது திருமணம் பிடிக்காதவர்களின் செயலாகத்தான் இது இருக்கும் என கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.