shadow

தூத்துக்குடியில் இருந்து சீனா, மலேசியாவுக்கு கப்பல் சேவை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு கனரக சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது தூத்துகுடி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர்.

இந்த சேவையால் தூத்துகுடியில் இருந்து சீனா, மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்வது இனி மிக எளிது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply