தூத்துகுடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
தூத்துகுடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவுதூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் என்பவர் வழக்கு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இதேபோல் கனிமொழியை எதிர்த்து பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை செளந்திரராஜனும் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த வழக்கு, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர ராஜன் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் கனிமொழிக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளையும் செப்டம்பர் 23-க்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் தள்ளிவைத்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.