shadow

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மாரடைப்பால் மரணம்

கடந்த 2003ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய மும்பை இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் முகமது ஹனிப் சையத் என்பவர் உள்பட மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நாக்பூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வந்த முகமது ஹனிப் சையத்துக்கு நேற்று திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அடுத்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தூக்குதண்டனை மூலம் உயிரிழக்க வேண்டிய முகமது ஹனிப் சையத் மாரடைப்பால் அதற்கு முன்னரே உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply