துளசி ரசம் சாப்பிட்டால் சளி, ஜலதோஷம் பறந்து போய்விடும்
சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு துளசி ரசம் அருமையான மருந்தாகும். இன்று இந்த துளசி ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துளசி இலை – ஒரு கப்,
மிளகு – 2 டீஸ்பூன்,
சீரகம், துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
தனியா – ஒரு டீஸ்பூன்,
புளி – எலுமிச்சை அளவு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைக்கவும்.
துளசியை தனியாக அரைத்து கொள்ளவும்.
புளியை நன்றாக கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிடவும்.
ஊற வைத்த பொருட்களை மிக்சியில் போட்டு கொதிக்கும் கரைசலில் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியை சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்…
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
சூப்பரான துளசி ரசம் ரெடி.
Leave a Reply
You must be logged in to post a comment.