துரைமுருகன் பேசியதை சொன்னால் அசிங்கமாகிவிடும்: சுதீஷ்

தேமுதிகவினர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேச எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூட்டணிக்காகவே பேச வந்ததாகவும், ஆனால் எங்களிடம் சீட் இல்லை என்று கூறி அனுப்பி வைத்துவிட்டதாகவும் துரைமுருகன் சற்றுமுன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

இந்த நிலையில் இதுகுறித்து எல்.கே.சுதீஷ் கூறியபோது, ‘ஒரு கட்சியுடன் இன்னொரு கட்சி பேசக்கூடாது என்பது இல்லை. நாங்கள் தலைவர் கேப்டன் வழியில் வந்தவர்கள். உள்ளுக்குள் பேசியதை அவர்களைப் போல் வெளியில் சொல்ல மாட்டோம்.

துரைமுருகனும், நானும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். என் பக்கத்து ஊர்க்காரர் தான். பலமுறை அவர் என்னிடம் பேசியுள்ளார். துரைமுருகன் என்னிடம் என்ன பேசினார் என்பதைச் சொன்னால் என்ன ஆகும். அவரது கட்சி பற்றி, தலைமை பற்றி அவர் என்னிடம் என்ன பேசினார் என்பதைச் சொன்னால் அசிங்கமாகப் போய்விடும். கட்சியின் நாகரிகம் கருதி அதைப் பேச விரும்பவில்லை’ என்று கூறினார்.

Leave a Reply