துப்பாக்கி சூடு சம்பவம்: நீதிமன்றத்தில் விஜய் சரண்
=சென்னை தாம்பரம் அருகே மாணவர் முகேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த விஜய் என்பவர் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் என்பவர் நேற்று தாம்பரம் அருகே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். நண்பர் விஜய்யின் அறையில் அவர் இருந்தபோது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து முகேஷ் ரத்த வெள்ளத்தில் இருந்ததாகவும், விஜய் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.