தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை: இருப்பினும் அதிருப்தி

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிறு அன்று வருவதால் தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூர் செல்பவர்கள் திங்கள் அன்று வேலைக்கு திரும்ப வேண்டும் என்றால் தீபாவளி அன்று இரவே ஊரில் இருந்து கிளம்ப வேண்டும்

எனவே தீபாவளிக்கு மறுநாள் திங்கள் அன்று விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தீபாவளிக்கு முந்தைய நாளான 26ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி கால அட்டவணைப்படி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சனியன்று விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் திங்கள் அன்று விடுமுறை குறித்த அறிவிப்பு இல்லாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

 

Leave a Reply