தீபாவளிக்கு ஒருநாள் கூடுதல் அரசு விடுமுறை: இன்ப அதிர்ச்சி அறிவிப்பு

இந்த ஆண்டு தீபாவளி திருநாள் ஞாயிறன்று வருவதையடுத்து திங்கட்கிழமை காலையிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் திறந்து விடும் என்பதால் தீபாவளியை அவசர அவசரமாக கொண்டாடிவிட்டு தீபாவளி அன்று இரவே ஊரில் இருந்து கிளம்ப வேண்டிய நிலை இருந்தது

இதனை அடுத்து திங்கள் அன்று அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் கோரிக்கை வைத்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 28ம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே தீபாவளிக்கு சனி ஞாயிறு திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் தீபாவளியைக் கொண்டாடும் லட்சக்கணக்கானோர் தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்

Leave a Reply