shadow

திருமுருகன்காந்தி பெங்களூரில் திடீர் கைது

மே 17 இயக்கத்தின் திருமுருகன்காந்தி அவ்வப்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று அவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு இன்று காலை இந்தியா திரும்பிய திருமுருகன்காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஐ.நா.சபை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மே பதினேழு இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பழிவாங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருமுருகன் காந்தியை தமிழகம் அழைத்து வர, தமிழக போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்

Leave a Reply