திருமணம் செய்ய மறுத்த காதலன் முகம் மீது ஆசிட் வீசிய இளம்பெண்
பொதுவாக காதலன் தான் காதலின் மீது ஆசிட் வீசுவதாக பல்வேறு செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலி ஒருவர் தன்னை திருமணம் செய்ய மறுத்த இளைஞன் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியை சேர்ந்த 19 வயது பெண், தான் காதலித்து வந்த காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்த காதலன் திருமணத்தை தவிர்த்து வந்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமான அந்த காதலி காதலன் மீது அசிட் வீசி உள்ளார்
இதில் அந்தக் காதலன் முகம் குறிப்பாக கண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 19 வயது இளம் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.