திருமணத்திற்கு முந்தைய நாள் தந்தையின் கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்த மகன்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்
பீகார் மாநிலத்தில் 26 வயது இளைஞர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண சடங்குகள் அனைத்தும் இருவீட்டாரும் செய்து கொண்டிருந்தபோது திடீரென இரவோடிரவாக மாப்பிள்ளை காணாமல் போனார்
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது போலீசார் காணாமல் போன இளைஞரை தேடி வந்தனர். இந்த நிலையில் விசாரணையில் மாப்பிள்ளை தந்தையின் கள்ளக்காதலியுடன் மாப்பிள்ளை ஓடிப் போன விவகாரம் தெரிய வந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்
மாப்பிள்ளையின் தந்தைக்கு 30 வயதுப் பெண் ஒருவர் கள்ளக் காதலியாக இருந்ததாகவும் அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து போகின்ற போது மகனுக்கும் அவர் மீது காதல் வந்ததாகவும் இதனை அடுத்து இருவரும் திடீரென ஓடிப் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது
திருமணம் நின்றது மட்டுமன்றி மாப்பிள்ளை தந்தையின் கள்ளக்காதலும் வெளியே தெரிந்ததால் அந்த குடும்பமே தற்போது வெளியே தலைகாட்ட முடியாமல் தர்மசங்கடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.