shadow

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அதிமுக , திமுக, தினகரன் அணி ஆகிய மூன்று கட்சிகளும் போட்டியிடுவது உறுதி என்ற நிலையில் தற்போது பாஜகவும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அறிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல் தேர்தல் நடந்தால் நல்லது. நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும், பா.ஜ.க. போட்டியிடும்.

ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், மந்திரிகள் யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக்கட்டும். இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதில் தி.மு.க. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடி உள்ளது.

Leave a Reply