திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 மணி நேரம் தரிசனம் ரத்து

வராக சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 3 மணி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் நடத்தப்பட்ட கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வராக சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக வராக சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

Leave a Reply