shadow

திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகாரம் இடிந்து விழுந்து ஒருவர் பலி: கெட்ட சகுனமா?

டிசம்பர் மாதம் சுனாமி உள்பட ஒருசில இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலின் பிரகாரம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் ஒரு கெட்ட சகுனமாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது

திருச்செந்தூர் கடற்கரைக்கு எதிர்புறம் உள்ள கோவிலை சுற்றி வரும் பிரகாரத்தின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். தகவல் கிடைத்தவுடன் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து காரணமாக திருச்செந்தூர் கோவிலின் நடை சாத்தப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகள் முடிந்தவுடன் நடை திறக்கப்படும் என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply